Publish Date: Fri, 12 Jul 2019 (17:49 IST)
Updated Date: Fri, 12 Jul 2019 (17:51 IST)
அண்டார்டிகா பகுதியில் இருந்து A68 என்று அழைக்கப்படும் பனிப்பாறை உடைந்து பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
தற்போது இந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிந்தது. இந்நிலையில், தற்போது இது நகர ஆரம்பித்துள்ளது.
சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, நல்ல வேகத்தில் பயணிப்பது போலவே தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்தார்.