Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவின் ஏவுகணை சோதனை: அமெரிக்காவின் உயர் ஜெனரல் வேதனை!

சீனாவின் ஏவுகணை சோதனை: அமெரிக்காவின் உயர் ஜெனரல் வேதனை!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (15:00 IST)
சீனா ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது என்பது ஸ்புட்னிக் தருணத்தை நினைவுப்படுத்துவதாக தெரிகிறது என்று அமெரிக்க உயர் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 
இதுதான் பனிப்போரின் ஆயுத போட்டிக்கான காரணமாகவும் அமைந்தது. ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய ஜெனரல் மார்க் மிலி, சீனாவின் ராணுவம் வேகமாக விரிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 
இம்மாத தொடக்கத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க ராணுவத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.
 
“இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை கவலையளிக்கும் ஒன்று. இது ஸ்புட்நிக் தருணத்தை போன்று உள்ளது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம்.” என மார்க் மிலி தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

120 மாடுகளை கைது செய்த ஊராட்சி நிர்வாகம்: திருவாரூரில் பரபரப்பு!