Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌கிர‌க‌ங்களு‌க்கு‌ம், உணவு பழ‌க்க‌த்‌தி‌ற்கு‌ம் தொட‌ர்பு உ‌ண்டா?

Advertiesment
அசைவு உணவு
, வியாழன், 2 செப்டம்பர் 2010 (16:42 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: பெருமாளுக்காக சனிக்கிழமைகளில் அசைவு உணவுகளை சாப்பிடுவதில்லை என்று கூறுகின்றனர், சிலர் வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடுவதில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் அசைவம் சாப்பிடுவார்கள். இதெல்லாம் பழக்க வழக்க முறைகளில் பண்பாட்டால் வந்ததா? இல்லையென்றால், இந்தந்த நாட்களில் கிரகங்களுடைய ஆளுமை அதிகமாக இருக்கிறது, அந்த குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டால் ஜீரணம் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பெருமாள் ஆதிக்க கிரகம் என்று வரும்போது புதன், சனி, சுக்ரன் இதெல்லாம் வருகிறது. வைணவ கிரகம் என்று புதனைக் குறிப்பிடலாம். சைவக் குடும்பமாக இருக்கும். அந்தக் குடும்பத்தில் ஒரு பையன் பெருமாள் கோயிலிற்குத்தான் விரும்பிப் போகிறான், சொன்னாலும் பிரதோஷத்திற்குப் போகமாட்டேன் என்கிறான் என்று சொல்வார்கள். புதன் ஆதிக்கத்தில் அவர் பிறந்ததிருக்கிறார். புதன் திசை வேறு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரை வற்புறுத்தாதீர்கள், அவர் பெருமாள் கோயிலிற்கே போகட்டும் என்று சொன்னேன்.

இதெல்லாம் என்னவென்றால், அந்த கிரகங்களுடைய ஆதிக்கம் பெற்ற, அந்த கிரங்களை ஆளும் தன்மை கொண்ட இறைவன் இருக்கும்போது இந்த மாதிரி இருக்கும். சூரிய திசை, சனி திசை என்று சொல்வார்கள். சூரிய திசையில் நிறைய பேருக்கு சிவ ஆதிக்கம் இருக்கும். திருவாசகம், தேவாரம் படிக்காமல் சாப்பிடவே மாட்டார்கள். அதுவே சந்திர திசை வரும் போது கொஞ்சம் குறையும். அபிராமி அந்தாதி படிக்கிறாருங்க என்று சொல்வார்கள். இதுவே செவ்வாய் திசை வரும்போது, என்னவென்று தெரியவில்லை கந்த சஷ்டி கவசம் படிக்கிறார்னு சொல்வார்கள். இதற்குதான் தசா புத்தி என்று சொல்கிறோம். இந்த தசா புத்தி வரும்போது காரமாக சாப்பிடுவது, குரு இருந்தால், இனிப்புகளைத் தேடித் தேடி சாப்பிடுவது இதெல்லாம் இருக்கும். இவர்களே அடுத்து சனி திசைக்கு வந்தால் இனிப்பு வேண்டாம், எதாவது காரமாக இருந்தால் கொடு என்று கேட்டு சாப்பிடுவார்கள். இந்த மாதிரி அவர்களுடைய புத்தி மாறுகிறது.

இதுபோன்று உணவு மாறும் போது, உடை மாறும் போது உள்ளத்தில் வணங்குகிற தெய்வம் - இப்ப இந்த அவதாரத்தைப் பிடிக்கிறது. இதை வணங்குவோம் - என்று மாறுகிறார்கள். இது முழுக்க முழுக்க கோள்களினுடைய ஆதிக்கம். அதனுடைய தாக்கம்தான்.

சாப்பாடு என்று வரும்போது, ராகு என்றால் வருத்தது, பொறித்தது. வாயில் போட்டால் மொறு மொறு என்று சத்தம் வரவேண்டும். ஆஃப் பாயில், பாஸ்ட·புட் இதெல்லாமும் ராகுதான். மற்றபடி, குறிப்பிட்ட கிழமைகளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதென்பதெல்லாம் ஒரு பழக்கத்தின் பார்ப்பட்டதே.

Share this Story:

Follow Webdunia tamil