Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடகொ‌ரியா-தெ‌ன்கொ‌ரியா போ‌ர் மூளுமா?

Advertiesment
வடகொரியா
, புதன், 12 ஜனவரி 2011 (17:45 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் தற்பொழுது நிலவிவரும் பதற்றத்தால் போர் மூளுமா? அது 3வது உலகப் போருக்கான அடிப்படையாகவும் அமையுமா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌‌வி‌த்யாதர‌ன்: அங்கு போர் மூள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. ஏனென்றால் இந்த வருடமே யுத்த நட‌ச‌த்‌திர‌த்‌தி‌ல் பிற‌ந்‌திரு‌க்கிறது. அ‌ந்விசாக நட்சத்திரம் செவ்வாயுடைய ராசியில் பிறந்திருக்கிறது. அதாவது விருச்சிக ராசியில் இந்த வருட‌மபிற‌ந்‌திரு‌க்கிறது. விருச்சிக ராசியில் இந்த வருடம் பிறப்பதால் யுத்தமுள்ள நாடுகள் கொஞ்சம் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஏனென்றால் செவ்வாயும், புதனும் எதிரெதிர் கிரகங்கள். புதன் புத்தீஸ்ட் கிரகம். செவ்வாய் வேறு. அதனால் செவ்வாயுடைய ஆதிக்கத்தில் இந்த வருடம் பிறப்பதாலும், புதன் அதற்கு எதிராக இருப்பதாலும் புத்த மதத்தை தழுவக்கூடிய நாடுகளுக்குள் பிரிவுகள் ஏற்பட்டு இரண்டும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

பொதுவாக வடக்கும், தெற்கும் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஏனென்றால் புதனுடைய திசை வடக்கு. செவ்வாயுடைய திசை தெற்கு. திசைகளையே தங்களுடைய பெயர்களாகக் கொண்ட நாடுகள்தான் மோதுகின்றன. மோதிக் கொள்ளும் நாடுகளும் வட கொரியாவும், தென் கொரியாவும்தான்.

இந்தியாவிலும் வடக்கும் தெற்கும் மோதிக்கொள்ளும். எல்லா நாடுகளிலும் வடக்கும் தெற்கும் பிரியும். காந்தப் புலங்களான வடக்கும், தெற்கும் இந்த வருடத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும். இதுபோன்ற அமைப்புகள்தான் இந்த வருடத்தில் கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil