Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அய‌ல்நா‌ட்டு அணு உலைக‌ளா‌ல் பா‌தி‌ப்பு வருமா?

Advertiesment
பிரான்ஸ் அணு உலைகள் பாதிப்பு
, வியாழன், 16 டிசம்பர் 2010 (18:42 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரான்ஸிடம் இருந்து 2 அணு உலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதை மராட்டிய மாநிலம் கடலோரத்தில் கைகாபூர் என்ற இடத்தில் நிறுவப் போகிறார்கள். இந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் நல்ல பலன் ஏற்பட‌ப்போவ‌தி‌ல்லை என்று நீங்கள் ஏ‌‌ற்கனேவ குறிப்பி‌‌ட்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அயல்நாடுகளில் இருந்து மேலு‌ம் அணு உலைகளை வாங்கி நிறுவப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால், இது எந்த விளைவை ஏற்படுத்தும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காரணிகள்தான் இதெல்லாம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அடுத்து, சில பேரிடர்களெல்லாம் இதன் மூலமாக வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மராட்டிய மாநிலம் என்றாலே, அந்த மாநிலத்திற்குரிய கிரகம் சனிதான். அணுக்கரு உலை என்பது சூரியன். ஏனென்றால் சூரியனில் என்னற்ற அணுக்கரு உலைகள் இருந்து கொண்டு இருக்கிறது. அதுதான் அளவற்ற வெப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.

அதனால், அந்த மாநிலம் பாதிப்படைவதற்கு, ஆட்சி மாற்றங்கள் போன்று சில பிரச்சனைகள் அந்தக் காரணியால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இந்தியாவும் இதுபோன்ற அணு உலைகளை செய்து 20 அணு உலைகள் இந்தியா முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கல்பாக்கத்தில் இருக்கிறது. மற்றொன்று கூடங்குளத்தில் இயங்கப் போகிறது. இவைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாதா?

கல்பாக்கம் என்பது தலைநகரம் சென்னைக்கு சரியாக அக்னி மூலையில் இருக்கிறது. தென்கிழக்குதான் அக்னி மூலை. தமிழகத்தின் தலைநகர் சென்னையின் தென்கிழக்கான அக்னி மூலையில் அணு உலை அமைந்தது சாதகமானது. அதனுடைய செயல்பாடுகள் நாட்டிற்குப் பயனுடையதாக அமையும். இதுபோன்று இல்லாத மற்ற இடங்களில் உள்ள அணு உலைகளால் வருங்காலத்தில் சில பாதிப்புகள் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil