மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு அணு மின் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்கிறது. இந்த அணு மின் திட்டங்களால் இந்தியாவிற்கு மின்சாரம் கிடைக்குமா? இல்லை கூடவே ஆபத்தும் வருமா?
ஆபத்துதான் அதிகமாக வரப்போகிறது. ஏனென்றால், மின்சாரத்திற்குரிய கிரகம் செவ்வாய். அணுக்களுக்கு உரிய கிரகம் குரு. குருவில் அணுக்கள் நிரம்பிக் கிடக்கிறது. அணு ஆற்றல் அதிகம் உள்ள கிரகம் குரு. அதற்கடுத்து லட்சக்கணக்கான அணுக்கரு உலைகள் இருக்கும் கிரகம் சூரியன். சூரியனை நாம் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.
குருவை சாத்வீக கிரகம் என்று சொல்கிறோம். அது என்னவென்றால், எதிரியை கொஞ்சம் உள்ளே வரவிடும். இந்த அணு மின் திட்டங்கள் மூலமாக இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்தியாவினுடைய ரகசியங்களும் வெளியில் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஏனென்றால், இந்திய ஜாதகப்படி குருவோட அணு மின் திட்டம் இப்போதைக்கு பெரிய தன்னிறைவையும், மகிழ்ச்சியையும் தரலாம். ஆனால், வருங்காலத்தில் அதுவே பெரிய சாபக்கேடாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.