Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2‌ஜி ஊழ‌ல் ‌தி.மு.க.‌வி‌ற்கு‌ம், கருணா‌நி‌தி‌‌க்கு‌ம் ‌பி‌ன்னடைவா?

Advertiesment
2ஜி ஊழல்
, வியாழன், 10 பிப்ரவரி 2011 (19:08 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று கைது செய்யப்பட்டவர் ஒருவர், கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்திருக்கிறது என்று சொல்வதைப் பார்க்கும் போது, இந்த ஊழல் தி.மு.க.வையும், முதலமைச்சர் கருணாநிதியையும், அவர் சாந்திருக்கு‌‌ம் கூட்டணியையும் பாதிப்பது போல் சூழல் இருப்பதாகத் தெரிகிறது. இது அவர்களுக்கு எப்படி அமையும்?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பதே சனியும், புதனும்தான். அலைவரிசை, எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்டது எல்லாவற்றிற்குமே சனியும், புதனும்தான் காரகத்துவமாக வருகிறார்கள். தற்பொழுது சனி வக்கிரமடைய ஆரம்பித்திருக்கிறார். இது ஆளும் அரசுகளை பாதிக்கக்கூடியது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டையுமே பாதிக்கக்கூடியது.

குறிப்பாக, சோனியா காந்தியினுடைய கிரக அமைப்புகள் படுமோசமாக இருக்கிறது. அவருக்கு மே மாதம் வரைக்கும் மோசமான காலகட்டம் இருக்கிறது. இது அடுத்தடுத்து மத்திய அரசிற்கு பெரிய சறுக்கல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இது இல்லாமல், இன்னும் சில பிரச்சனைகள், சில ஊழல்கள் எல்லாம் கூட வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

மத்திய அரசு எல்லா வகையிலும் எதிர்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் இந்தச் சூழலில் தள்ளப்படும். 2ஜி ஸ்பெக்ட்ரத்திற்குரிய கிரகங்கள் தற்பொழுது வக்கிரகதியாகும் போது ஆள்பவர்களுக்கு பெருத்த பாதிப்புகளை உண்டாக்கும்.

ஆனால், தனிப்பட்ட வகையில் மாநிலத்தில் ஆளக்கூடியவர்களுடைய ஜாதகத்தைப் பார்க்கும் போது, மிகப் பெரிய நெருக்கடி என்ற அளவிற்குப் போகாது. ஆனால் நெருக்கடி உண்டு. இங்கு இருப்பவர்களுக்கும் நெருக்கடி உண்டு, அரசாங்கத்திற்கும் நெருக்கடி உண்டு, ஆட்சிக்கும் நெருக்கடி உண்டு, கட்சிக்கும் நெருக்கடி உண்டு. மக்கள் மத்தியிலும் சின்ன சின்ன வெறுப்புணர்வை கொடுப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஏனென்றால் தற்பொழுது உள்ள கிரக அமைப்புகள் அதுபோலத்தான் இருக்கிறது.

சனி வக்கிரமானாலேயே ஆட்சியாளர்களுக்கு எதிரான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைக்கும். சனிதான் பாட்டாளி மக்களுக்குரிய, அதாவது சாதாரண மக்களுக்குரிய கிரகம். அதனால்தான் சனி வக்கிரமடையும் போது அவர்களிடைய வெறுப்புணர்வை உண்டாக்குகிறது.

தற்பொழுது குருவும் சனியால் பார்க்கப்படுகிறார். இந்த குருதான் அரசாட்சி, அரசாங்கம், ஆள்பவர்கள், அதிகாரிகள் இதற்கெல்லாம் உரிய கிரகம். இந்த குரு தனது சொந்த வீட்டில் இருந்தாலும் பாவ கிரகமான சனியால் பார்க்கப்படுவதால் அதிகாரிகள் போன்றவர்களுக்கு அடுத்தடுத்து சில பிரச்சனைகள், கைதுகள் போன்ற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஆக மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும், இது மத்திய அரசிற்கு மிகப்பெரிய நெருக்கடி, மத்திய அரசிற்கு வரலாற்றுப்பூர்வமான பெரிய பின்னடைவு போன்றெல்லாம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil