தமிழ்.வெப்துனியா.காம்: தற்பொழுது நாட்டில் மிகப் பெரிய அளவில் பேசப்படக்கூடியது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல். அமைச்சராக இருந்த ராசா பதவி விலகியிருக்கிறார். இதன் பாதிப்பு எப்படி போகும்?
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: ராசா என்பது குருவினுடைய பெயர். குருவிற்கு ராகன், பிரகஸ்பதி என்றெல்லாம் கூட பெயர் உண்டு. ராஜா திசையில் கெட்டாரும் இல்லை, ராகு திசையில் வாழ்ந்தாரும் இல்லை. ராஜா திசையில் கெட்டாரும் இல்லை என்றால் குரு திசையில் கெட்டார் இல்லை.
குரு வக்கிரமாகி கும்பத்திற்கு வந்ததிலிருந்துதான் ராசாவிற்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்தது. 21 ஆம் தேதி இரவு குரு தன் சொந்த வீட்டிற்கு மாறிவிட்டார். அதன்பிறகு இதன் வேகமெல்லாம் குறைந்துவிடும்.
அதன்பிறகு பெரிய அளவில் பாதிப்புகள் வரும் அளவிற்கு போகும். ஆனால் நூலிழையில் தப்பிக்கிறார் என்பது போல நடக்கும். பாதிப்புகள் உண்டு. ஆனால் நூலிழையில் தப்பிப்பதாக இருக்கும்.