Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌இ‌ந்‌தியா - பா‌‌கி‌ஸ்தா‌ன் அணு ஆயுத‌ப் போ‌ர் மூளுமா?

Advertiesment
இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதப் போர்
, வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (18:07 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே அல்லது இந்தியா - சீனா இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் வாய்ப்புகள் குறுகிய காலத்திலேயோ அல்லது நீண்ட காலத்திற்குப் பிறகோ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்தியாவினுடைய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது, தற்போது சனியினுடைய நிலைமை, ராகு, கேதுவினுடைய நிலைமை இதெல்லாம் அதிகமான சாதகத்தில் இருக்கிறது. இந்தியா ரிஷப லக்னம், கடக ராசி. அது தற்போது நன்றாக இருக்கிறது. ஆனால், 19.12.2011ல் இருந்து 4வது இடத்திற்கு சனி வருகிறார். 4வது இடத்திற்கு சனி வருவதும், அதற்கடுத்து 16.05.2011ல் இருந்து ராகு, கேதுவினுடைய மாற்றமும் அவ்வளவு சாதகமாக இல்லை.

ராகு ராசிக்கு 5வது இடத்தில் வருகிறது. அப்படி வரும்போது வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறுபான்மையும், பெரும்பான்மையும் மோதிக் கொள்வதற்கு, வெளிநாடுகளில் இருந்து சில சக்திகள் தூண்டிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. 19.12.2011ல் இருந்து 4வது இடத்திற்கு வரும் சனி 2012, 2013, 2014 மத்திய பகுதி வரை இருக்கும்.

அந்தக் காலகட்டங்களிலெல்லாம் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்புகள், ஏமாற்றங்கள், அடிபடக்கூடிய நிலை, உணவுப் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களில் அழிவு, போர் திணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் உள்ளது.

இதுதவிர, நேரடியான போர் என்றில்லாமல், மறைமுகப் போர் போன்றவையும், அதாவது இந்தியச் சந்தையை பலவீனப்படுத்துவது, அயல்நாட்டுச் சந்தையை தூண்டிவிடுவது போன்ற அமைப்புகளும் வரும் டிசம்பர் 2011ல் இருந்து அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil