Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரு‌ந்து ‌விப‌த்துக‌ள் அ‌திக‌ரி‌க்க‌க் காரண‌ம்?

Advertiesment
தனியார் பேருந்து விபத்து
, புதன், 29 ஜூன் 2011 (21:44 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சமீப காலத்தில் தனியார் பேருந்துகள் விபத்திற்குள்ளாகியுள்ளது. அதில் ஒரு பேருந்து முழுவதுமாக எரிந்து நிறைய பேர் இறந்து போனார்கள். இதையெல்லாம் பேருந்துகள்குக்கு நேரம் சரியில்லை என்று சொல்லலாமா? ஏனென்றால், தனியார் பேருந்துகளெல்லாம் நன்றாக பராமரிக்கப்பட்டு போய் வந்துக் கொண்டிருந்த நிலையில் - பொதுவாக அரசுப் பேருந்துகள்தான் கவிழ்ந்தெல்லாம் நிற்கும் - இதுபோன்று சொல்லலாமா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: வாகனக்காரகன் என்று நாங்கள் சொல்வது சுக்ரனை. இந்தச் சுக்ரன் சனியினுடைய பார்வைக்கு வரும்போது இதுபோன்ற சம்பவங்கள், பாதிப்புகள் நடக்க வாய்ப்புள்ளது. தற்பொழுது ஒரு பேருந்து விபத்து என்று சொன்னீர்களே, அந்தக் காலகட்டத்தில் எல்லாம் சனி, சுக்ரன் பார்வையெல்லாம் இருந்திருக்கிறது. இதுபோன்ற சனி, சுக்ரன் பார்வை இருக்கும் காலகட்டத்திலெல்லாம் இதுபோன்ற பெரும் விபத்துகள் எல்லாம் உருவாகும்.

அதன்பிறகு, உரிமையாளர் ஏழரைச் சனியில் இருந்தாலோ, அல்லது சனி திசையில் ராகு புத்தி அல்லது ராகு திசையில் சனி புத்தி போன்று இருந்தால் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளது. அதற்கடுத்து, 10, 12 பே‌ரஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி வண்டியில் ஏறினாலே அந்த வண்டி கண்டிப்பாக விபத்திற்குள்ளாகும். இதை ஒரு பரிட்சயமாகவே செய்து பார்த்தோம். 1994இல் ஏழெட்டு நண்பர்கள். அதில் இரண்டு பேருக்கு ஏழரைச் சனி, இரண்டு பேருக்கு அஷ்டமச் சனி, இரண்டு பேருக்கு கண்டகச் சனி என்று மாறி மாறி இருந்தது. நானும் கூட போயிருந்தேன். சரியாக மதுராந்தகம் அருகே பேருந்து கவிழ்ந்தது.

இதேபோல, ஏழரைச் சனி அதிகமாக உள்ளவர்கள் அந்தப் பேருந்தில் பயணித்தாலோ அந்தப் பேருந்து விபத்திற்குள்ளாகும். அது தனது கட்டுப்பாட்டை இழக்கும். இதை நாம் நிறைய ஆய்வில் பார்த்திருக்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil