Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனி மனித ஒழுக்கம் இன்றைய சூழலில் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதற்கு காரணம் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
தனி மனித ஒழுக்கம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:29 IST)
இன்றைய சூழலில் தனி மனித ஒழிக்கம் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுள்ளதை சமீபத்திய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. கோயிலிலேயே காம லீலைகளில் ஈடுபட்ட பூசாரியில் துவங்கி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் கிடைக்கக் கூடாத பொருட்கள் கிடைத்தது வரை பல்வேறு செய்திகள் வாராந்திர பத்திரிகைகளில் உலா வருகின்றன. தனி மனித ஒழுக்கம் இவ்வளவு கீழ்த்தரமாக சென்றதற்கு காரணம் என்ன?

பதில்: கன்னி ராசிக்கு சனி (கடந்த நவம்பரில்) பெயர்ச்சியாகி உள்ளதால் உலகெங்கும் முறையற்ற பாலியல் தொடர்புகள் (முன்பு இருந்ததை விட) அதிகரித்து வருகிறது. கன்னிச் சனியால் உலகெங்கும் காமம் (முறையற்றது) அதிகரிக்கும். சிற்றின்ப பிரியர்களுக்கு, சிற்றின்பம் தொடர்பான வேட்கை அதிகரிக்கும். இது முறையற்ற உறவில் முடியும்.

கன்னி ராசியில் சனி இருக்கும் வரை உலகெங்கும் நடக்கும் குற்றங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களே முதலிடம் பிடிக்கும் என்று கூடக் கூறலாம். வரும் 21/12/2011 வரை இதே நிலை நீடிக்கும்.

சனி பகவான் கன்னியில் அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்களின் நிலை என்ன?

கன்னி ராசியில் சனி அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்கள் ஒரு சிலருக்கு காம உணர்வே முற்றிலும் இல்லாமல் போகக்கூடும். சிலருக்கு வழக்கத்திற்கு விட இச்சை அதிகமாகும். அது அவரவர் ஜாதக நிலையைப் பொறுத்தும் மாறுபடும்.

Share this Story:

Follow Webdunia tamil