Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌‌தியா த‌னி‌த்‌த‌ன்மையை இழ‌க்க நே‌ரிடு‌ம்!

Advertiesment
இந்தியா தனித்தன்மை
, வியாழன், 8 ஏப்ரல் 2010 (16:49 IST)
நமது நாட்டில் குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது. எதிலும் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டு காலத்தில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்:

ரிஷப லக்னம் கடக ராசியில்தான் இந்தியா இருக்கிறது. அதன்படி, அடுத்தடுத்துப் பார்க்கும் போது இந்தியாவினுடைய அமைப்புகள் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அதனால், இந்தியாவினுடைய தனித்தன்மையை இந்தியா இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

தனித்தன்மை எ‌ன்றா‌ல்?

மற்ற நாடுகளுடன் சேராமல், தனிப்பட்ட முறையில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது இல்லையா? அதையெல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக இழக்க ஆரம்பிக்கும். ஏனென்றால் அடுத்த சனிப் பெயர்ச்சி 2011 டிசம்பரில் வருகிறது. அதன்பிறகு இந்தியாவினுடைய கடக ராசியில் 4வது இடத்திற்கு சனி பகவான் வந்து உட்காருகிறார். அந்த நேரத்தில் ஒற்றுமையெல்லாம் கொஞ்சம் குறையும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மற்ற துறையாக இருந்தாலும் சரி, இந்தியாவினுடைய ஒற்றுமை குறையும். பிரிவினை போன்றவைகள் அதிகரிக்கும். அதனை தூண்டக்கூடிய சக்திகள் அதிகரிக்கும். அயல்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய அந்நியச் சக்திகள் அதிகமாகும்.

அடுத்து பார்க்கும்போது, இந்தியாவிற்கு 3வது வீட்டில் சனி உட்கார்ந்திருக்கிறது. அதனால் அந்நிய முதலீடுகள், தொழிற்கூடங்கள் என்று பெரிய தோற்றத்தை உருவாக்கினாலும், இந்தியாவினுடைய தனித்தன்மையை பாதிக்கும் இழப்புகள், இரகசியங்கள் வெளியாகுதல் இந்த மாதிரியான நெருக்கடிகள் அடுத்தடுத்து வருவதற்கான வாய்புகள் இந்தியாவிற்கு இருக்கிறது.

குறிப்பாக 2011 இறுதியில் அல்லது 2012 ஆண்டு ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் மீது போர் திணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அண்டை நாடுகள் மூலமாக சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் கொஞ்சம் கவனமாகத்தான் அணுக வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil