வரும் வாரத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இரண்டு பெண்மணிகளைப் பற்றி இங்கே சுருக்கமாகக் காணலாம்.
வேலு நாச்சியார் :-
வெள்ளையரை எதிர்த்து நடந்த முதல் விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரப் பெண்மணி இவர்.
புலித்தேவன், மருதுச் சகோதரர்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்.
விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழகப் பெண்களுள் முதன்மையானவர்.
தில்லையாடி வள்ளியம்மை :-
தென்னாப்பிரிக்காவில் அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து இந்தியர்களின் உரிமைககாகப் பாடுபட்ட தமிழ்ப் பெண்.
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்தவர். காந்தியடிகளின் அறவழியில் நின்று தன் கடைசி மூச்சு வரை இந்தியாவின் நலனுக்காக வாழ்ந்தவர்.