புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
4. கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
5. கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
6. தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளதா?
7. உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது அவசியம் ஏற்படுமா? அதனை நிறுத்த வேண்டி வந்தால், அதனால் தாயின் உடல்நிலை பாதிக்குமா?
8. நீங்கள் பணியாற்றும் இடத்தில் உள்ள சூழல், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
9. பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
10. பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
11. எப்போது கருத்தரிக்க இயலும்?
12. கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
13. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
14. பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
15. சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
16. கருக்கலைப்பு அல்லது கருப்பையில் ஏதேனும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் இயற்கையான முறையில் கருத்தரிப்பு ஏற்படுவதில் பாதிப்பு ஏற்படுமா?
17. கருவை 10 மாதம் தாங்கி பெற்றெடுக்கும் வகையில் தாயின் உடல்நிலை உள்ளதா?
18. கருவுற்ற காலத்தில் நல்ல மருத்துவமனையைத் தேர்வு செய்து தொடர்ந்து அங்கு பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் பெறுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
19. கருத்தரிக்கும் காலத்தைக் கணக்கிட்டு, பிரசவம் ஆகும் காலம் நல்ல தட்ப வெப்ப நிலையில் இருக்குமா என்பதை ஆராய வேண்டும்.
20. பிரசவத்திற்குப் பிறகு பிள்ளையையும், குழந்தையையும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள உறவு முறையில் யார் இருக்கிறார்கள், யார் வீட்டில் தங்கி உடல் நலனைப் பேணுவது என்பதை திட்டமிடுவதும் அவசியம்.
21. தாய்க்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் அறிந்து கொளள் வேண்டும்.
22. கருவின் வளர்ச்சியும், அதில் தாயின் பங்கினையும் அறிந்து கொள்ள வேண்டும்.
23. பிரசவ நேரத்தின் அறிகுறிகள் என்ன, பிரசவத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் பற்றி ஓரளவிற்கேனும் தாய் தெரிந்திருக்க வேண்டும்.
24. வாகனம் இயக்குபவராக இருந்தால், கருவுற்ற காலத்தில் தொடர்ந்து வாகனத்தை இயக்குவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
25. பணி அழுத்தம் நிறைந்த வேலை செய்யும் தாயாக இருந்தால், கருவுற்ற காலத்தில் வேலையை விட்டுவிடுவதோ அல்லது பணிச் சுமை குறைந்த இடத்திற்கு வேலையை மாற்றிக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டும்.
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.