Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனுக்கு ஆதரவாக தொப்பி அணிந்து பிரச்சாரம் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தினகரனுக்கு ஆதரவாக தொப்பி அணிந்து பிரச்சாரம் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
, வெள்ளி, 24 மார்ச் 2017 (06:30 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால் அந்த தொப்பியை அணிந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.


 


நேற்று இரவு ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது அவர் பேசியதாவது: ‘‘இரட்டை இலை சின்னத்தை முடக்க யார் காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகரில் டி.டிவி. தினகரன் போட்டியிடுகிறார்’’ என்று கூறினார்.

சுமார் 120-க்கு மேற்பட்டோர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளதால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்: தமிழர்கள் அதிருப்தி