Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் 355,356 திட்டம்! ஆட்சி கலைக்கப்படுகிறதா?

Webdunia
புதன், 10 மே 2017 (05:30 IST)
அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை எனினும் கடந்த 15 நாட்களாக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஓபிஎஸ்க்கு முதல்வர் பதவி, செம்மலை, பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் ஆகிய கோரிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஏற்கவில்லை என்பதே முக்கிய காரணம்



 


மேலும் எடப்பாடியாரின் அணி, தினகரனுக்கு மட்டுமே எதிரியாம். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கும் ஐடியாவே இல்லை என்று கூறிவிட்டதாம்

இந்த நிலையில் இரு அணியினர்களின் மோதல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து வரும் பாஜக, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 355வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை முடக்கவும், பின்னர் ஆறுமாதங்கள் கழித்து 356வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை கலைக்கவும் முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதும் உறுதி என்றும், அதுவரை உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலும் கேள்விக்குறியே என்றும் பாஜக தலைமை அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments