மக்கள் நலக்கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து செயற்குழுவுக்கு பின்னர் முடிவு செய்வோம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தோல்வி அடைந்ததற்கு அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு. 234 தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடந்துள்ளது.
வருகின்ற 11ஆம் தேதி சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் ஏற்படும் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திப்பது, வருங்கால வளர்ச்சி பணிகள் பற்றி நான் அறிவிப்பேன்.
மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. வெற்றி தோல்வி குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
மக்கள் நலக்கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து செயற்குழுவுக்கு பின்னர் முடிவு செய்வோம் என ஏற்கனவே கூறிவிட்டேன். எங்கள் கட்சியை வளர்க்கத்தான் செயல்திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். வேறு கட்சியில் சேருவதற்காக அல்ல” என்றார்.