Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல டிவி நடிகைகள் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல டிவி நடிகைகள் கைது
, வியாழன், 9 ஜூன் 2016 (13:01 IST)
சாவ்தான் இந்தியா கிரைம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை உட்பட நான்கு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
மும்பை கோரேகாவ்ன் பகுதியில் ஒரு விபச்சாரக் கும்பல் செயல்படுவதாகவும், பெரும் புள்ளிகளுக்கு அங்கிருந்து பெண்களை விபச்சாரத்திற்காக அனுப்புகிறார்கள் என்ற தகவல் மும்பை போலீசாருக்கு கிடைத்தது. 
 
இதையடுத்து, பெண்களை அனுப்பும் ஒரு நபர் போல போலீசார் அந்த கூட்டத்தை அனுகினார். அதன்பின், பிலிம் சிட்டி அருகே உள்ள கட்டிடத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாவ்தான் இந்தியா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆகியோர் சிக்கினர்.
 
மேலும், அவர்களை வைத்து விபச்சாரம் செய்து வந்து கும்பலையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த கும்பலின் தலைவன் தப்பிவிட்டான். 
 
மும்பையில் உள்ள பெரும்புள்ளிகளுக்கு, இணையதளம் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்: பெற்றோர்கள் முற்றுகை