Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பி.எஸ் அணியில் இணைந்த 1000 தேமுதிகவினர் - விஜயகாந்த் அதிர்ச்சி

Advertiesment
OPS
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:42 IST)
சென்னையை சேர்ந்த ஏராளமான தேமுதிகவினர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கிய பிறகு அவருக்கு இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர், அதிமுக எம்.பி 11 பேர், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளான பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் அவரது அணியில் உள்ளனர். மேலும், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தங்கள் பக்கம் விரைவில் வருவார்கள் என ஓ.பி.எஸ் அணி நம்புகிறது.
 
அந்நிலையில், மற்ற கட்சியிலிருந்தும் ஏராளமானோர் விலகி, ஓ.பி.எஸ் பக்கம் செல்வது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை மதிமுகவில் இருந்து 1000 பேர் விலகி ஓ.பி.எஸ் அணியில் இணைந்தனர். 
 
இந்நிலையில், தேமுதிகவை சேர்ந்த 1000 பேர் இன்று, கிரீன்வேஸ் சாலையில் உள்ள் ஓ.பி.எஸ்-ஸின் வீட்டிற்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த விவகாரம், தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக மாணவர் அமைப்பால் பாலியல் மிரட்டல்: கார்கில் போர் வீரர் மகள் புகார்!!