Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அதிமுக பொதுக்குழு: ஆனால் சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை!

Advertiesment
இன்று அதிமுக பொதுக்குழு: ஆனால் சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை!
, வியாழன், 29 டிசம்பர் 2016 (02:50 IST)
பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சசிகலா இதுவரை ஒப்புதல் தரவில்லை அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், ”தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி, அதிமுகவின் பொதுக் குழு கூட்டம், நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை யாரும் அந்த பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மனு தாக்கலும் செய்யவில்லை.

பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என, கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.

அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அன்பு மிகுதியால் கட்சியினர் அவ்வாறு அழைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முச்சந்தியில் மக்களின் தண்டனையை ஏற்க மோடி தயாரா? : லாலு கேள்வி