Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா முதல்வராவது உறுதி? கவர்னர் நாளை வருகை

சசிகலா முதல்வராவது உறுதி? கவர்னர் நாளை வருகை
, ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (14:02 IST)
8ஆம் தேதி வருவதாக இருந்த தமிழக கவர்னர் நாலை வருவதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா முதல்வராவது உறுதி என தகவல்கள் வெளியாகி வருகிறது.


 


தமிழக பொறுப்பு கவர்னர் பிப்ரவரி மாதம் வரும் 8ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்தார். ஆனால் அவர் நாளை தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் வீட்டில் இருப்பவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எது நடந்தாலும் ஜனநாயக முறைப்படி நடக்கும், என்று தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் ஆர்.கே.நகர் பகுதியில் தீபா தனது அரசியல் பணிகளை தொடங்கி விடார். ஆனால் சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தமிழக கவர்னரின் திடீர் வருகை மூலம் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இது முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படம்: இயக்குநருக்கு கொலை மிரட்டல்