Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரா? மகாராணியா? புதுவை முதல்வர் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (05:30 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


 


இந்த நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்றும் அவர் ஆளுனராக செயல்படாமல், மகாராணி போல் செயல்படுவதாகவும் கூறினார். ஆளுனரை நேரடியாக தாக்கும் வகையில் முதல்வர் கருத்து கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments