Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரா? மகாராணியா? புதுவை முதல்வர் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (05:30 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


 


இந்த நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்றும் அவர் ஆளுனராக செயல்படாமல், மகாராணி போல் செயல்படுவதாகவும் கூறினார். ஆளுனரை நேரடியாக தாக்கும் வகையில் முதல்வர் கருத்து கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments