Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்: ஈபிஎஸ் அதிரடியால் பரபரப்பு

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்: ஈபிஎஸ் அதிரடியால் பரபரப்பு
, புதன், 26 ஜூலை 2017 (05:41 IST)
சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஈபிஎஸ் அணிக்கு தாவியதில் இருந்தே ஓபிஎஸ் அணியினர் பரபரப்பில் உள்ளனர். மேலும் ஆறுக்குட்டிக்கு ஈபிஎஸ் அணியினர் ஒரு புரொஜெக்டை கொடுத்துள்ளதாகவும், அதன்படி ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைவரையும் அவர் அழைத்து வந்தால் அவருக்கு வெயிட்டான ஒரு பதவி அளிக்கப்படும் என்பதுதான் அது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன



 
 
இதன் காரணமாக ஓபிஎஸ் அணியில் உள்ள மாபா பாண்டியராஜன் உள்பட அனைவரிடமும் ஆறுக்குட்டி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் ஓபிஎஸ் கூடாரமே காலியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
‘இன்னும் ஆறு மாதங்களில் பன்னீர் பழையபடி டீக்கடையில்தான் போய் உட்கார வேண்டும்’ என்று பழ.கருப்பையா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். அது விரைவில் உண்மையாகிவிடும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் அணிகளை இணைக்கும் வேலையை ஒரு மாதத்தில் முடியுங்கள்; இல்லையென்றால் நான் அணி மாறிக் கொள்கிறேன்’ என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரடியாகவே ஓபிஎஸ் அவர்களிடம் கூறியதாகவும் வதந்தி பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை விடுதலை செய்யுங்கள்: புதிய ஜனாதிபதிக்கு முதல் மனுவை அனுப்பிய கர்ணன்