Publish Date: Thu, 24 Aug 2017 (22:00 IST)
Updated Date: Thu, 24 Aug 2017 (22:10 IST)
அதிமுகவின் இரு அணிகளாக இருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்ததால் கடுப்பான தினகரன் அணி, தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிகையை வைத்து மிரட்டி வருகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த அணி செயல்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஏற்கனவே தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ அந்த அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் தான் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி. சற்றுமுன் தினகரன் வீட்டில் ரத்னசபாபதி சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தினகரன் அணிக்கு எத்தனை பேர் சென்றாலும் பாஜகவின் ஆதரவு இருக்கும் வரை ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அப்படியே ஆட்சியை கலைக்க தினகரன் முடிவு செய்தால் அவரை நோக்கி வழக்குகள் பாயும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.