Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல ரகசியங்களை வெளியிடுவேன்; எடப்பாடி அணியை எச்சரித்த தினகரன் ஆதரவு எம்.பி

பல ரகசியங்களை வெளியிடுவேன்; எடப்பாடி அணியை எச்சரித்த தினகரன் ஆதரவு எம்.பி
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (14:37 IST)
அதிமுக அணிகள் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வெண்டியதிருக்கும் என தினகரன் ஆதரவு எம்.பி. நாகராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் டிடிவி தினகரன் அணியில் உள்ளார். இவர் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
 
தற்போது அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சசிகலா மூலமாக பதவிக்கு வந்தவர்கள். தற்போது இவர்கள் சசிகலாவை ஓரம் கட்டுவது ஏன்? குற்றச்சாட்டுக்கு உள்ளாகுபவர்கள், கருத்து வேறுபாடு உள்ளவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். சசிகலாவை ஒதுக்குபவர்கள் அவர் மூலம் கிடைத்த பதவி, பணம் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
 
அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் ஒன்று செரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியது இருக்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசு வாழ்க்கை வாழ்ந்த குர்மித் சிங் சிறையில் ஒப்பாரி....