Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்கள் பலிகடா; தினகரன் எஸ்கேப்: ஐடி-யிடம் தப்பிக்க மாஸ்டர் ப்ளான்!!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (09:12 IST)
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை சில அமைச்சர்கள் மிரட்டியுள்ளனர்.


 
 
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர். 
 
அப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். 
 
இதனால் அவர்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புகாருக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் எந்நேரமும் விசாரணை செய்து கைது செய்யப்படலாம். இதனால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
 
ஆனால் டிடிவி தினகரனோ, வருமான வரித்துறை சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறி அமைச்சர்களை கைது செய்யட்டும். அப்போதுதான் பாஜகவை விமர்சித்து நல்ல இமேஜ் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். 
 
இதை கேள்விபட்ட அமைச்சர்கள் அதிர்ந்து போயுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்படாத காரணத்தால் முன்ஜாமீன் கூட கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments