புதுவையில் இருந்து வெளியேறும் நேரத்தை விதிதான் தீர்மானிக்கும். கிரண்பேடி

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (07:01 IST)
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி இடையிலான இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. இருவருக்கும் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கிரண்பேடி அளித்த ஒரு பேட்டியில் பொதுமக்களையும் அதிகாரிகளையும் நான் சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்ய நடவடிக்கை எடுப்பது தவறா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்



 


யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி, தனித்து இயங்கும் அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த முதன்மை அதிகாரங்கள், சட்ட அதிகாரங்களுக்கு இணையானவை. நிதி தொடர்புடைய அதிகாரங்கள், துணைநிலை ஆளுநரின் கைகளிலேயே உள்ளன. துணைநிலை ஆளுநரின் அதிகாரம் பற்றி சட்ட விதிகளில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அது மதிக்கப்பட வேண்டும்.

வளமான புதுச்சேரியாக இந்தப் பிரதேசத்தை மாற்றுவதற்கு, எனக்கு நானே இரு ஆண்டுகள் காலஅவகாசம் நிர்ணயம் செய்திருக்கிறேன். நானோ, என் வாழ்க்கையோ, என் எண்ணமோ பதவியைச் சார்ந்து இருக்கவில்லை. நான் புதுவையைவிட்டு வெளியேறுவதற்கான நேரம் வரும்போது, விதி அதைத் தீர்மானிக்கும்.”
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments