Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரை பார்க்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது: ஆளுநர்

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (09:57 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்க்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி உடல்நலம் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனால் முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
 
அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவை பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை கருதி அவர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று பார்க்காமல் திரும்பிவிட்டேன், என்று குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் ஜெயலலிதா உடல்நிலை குறித்த எந்த தகவலும் அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிடவில்லை.

அருணாச்சல் பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக.. சிக்கிமில் மாநில கட்சிக்கு வெற்றி..!

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்: இமெயில் மிரட்டலால் அதிர்ச்சி..!

பாஜக நோட்டா கட்சியா? இதுதான் ஆரம்பம்.. கருத்துக்கணிப்பு குறித்து அண்ணாமலை..!

மீண்டும் மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்.. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அறிவிப்பு..!

இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments