Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழச்சியை காப்பி அடித்த பாதிரியாருக்கு சிறை

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (09:23 IST)
ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தமிழச்சி எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்து, தானும் அதேபோல் பதிவுகள் இட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டார்.


 

 
அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த எஸ்.சந்துரு(36) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜேசுராஜ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினரும், கணினி துறையில் நிபுணத்துவம் பெற்ற குழுவினரும் ஜேசுராஜ் ஃபேஸ்புக் கணக்கை ஆராய்ந்து பார்த்தனர்.
 
அந்த ஃபேஸ்புக் கணக்கு தூத்துக்குடி மாவட்டதைச் சேர்ந்த ஆண்டனி ஜேசுராஜ்(24) என்பவரது என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரை கைது செய்து விசாரணையில் நடத்தினர்.
 
விசாரணையில் அவர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டார். 
 
மேலும் ஆண்டனி ஜேசுராஜ், முதல்வர் உடல்நிலை குறித்து பிரான்ஸ் தமிழச்சி எழுதிய அந்த பதிவை ஷேர் செய்து, அதுபற்றி மேலும் வதந்தி பரப்பும் விதமாக எழுதியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments