Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு. அதிரடி முடிவால் திமுக அதிர்ச்சி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (04:45 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதிலும், சிறு கட்சிகளின் ஆதரவை பெறுவதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை பெறுவதற்கு திமுகவும் ஓபிஎஸ் அணியும் முயற்சி செய்து வருகின்றன



 


இந்நிலையில் ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ஜி.கே.வாசன் , ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஓபிஎஸ் அணியின் வேட்பாளரை அறிவித்தவுடன் தனது முடிவை அவர் வெளிப்படையாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஜி.கே.வாசனின் இந்த அதிரடி முடிவால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments