Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று அணிகளும் இணைகிறதா? அதிமுகவில் பரபரப்பு

மூன்று அணிகளும் இணைகிறதா? அதிமுகவில் பரபரப்பு
, வியாழன், 6 ஜூலை 2017 (06:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக சிதறுதேங்காய் போல சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என மூன்றாக உடைந்தது. இருப்பினும் ஆட்சிக்கு ஆபத்துக்கு இல்லாமல் உள்ளது.



 
 
இந்த நிலையில் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய தயாராகிவிட்டன. அதிமுக ஆட்சிமன்ற குழுவின் தலைவர் பொறுப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு கொடுக்கவும் அவரது அணியை சார்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் ஈபிஎஸ் அணி ஒப்புக்கொண்டதால் மிக விரைவில் இரு அணிகள் இணைப்பு குறித்த செய்தி வரும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தான் தனிமையில் விடப்பட்டதை உணர்ந்த தினகரன், இரு அணிகளுடனும் ஒத்துப்போக முடிவு செய்துவிட்டதாகவும், மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கு மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க கட்சியினர்களின் முழு ஒத்துழைப்பு தேவை என்பதை தினகரன் தாமதமாக புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்பிக்கு போதை மருந்து கொடுத்து புளுபிலிம் எடுத்த இளம்பெண் கைது