Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: 'குடி'மகன்கள் உற்சாகம், பொதுமக்கள் சோகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: 'குடி'மகன்கள் உற்சாகம், பொதுமக்கள் சோகம்
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (01:01 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் அந்த தேர்தல் திடீரென தேர்தல் ஆணையத்தால் நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.



 


இந்த நிலையில் தேர்தலுக்காக விடப்பட்டிருந்த 12ஆம் தேதி விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஆர்.கே.நகர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக மூடப்பட வேண்டும் என்று கூறியிருந்த டாஸ்மாக் கடைகளும் வழங்கும் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆர்கே நகர் குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் அளவுக்கு அதிகமாக பணப்பட்டுவாடா நடந்ததாக தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததால் நேற்று நள்ளிரவு இந்த தொகுதியின் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 நாடுகள் வழியாக 7500 மைல்கள் செல்லும் புதிய உலக சாதனை ரயில்