தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்துவரும் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஏப்ரல் 13 முதல் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி, வேதாரண்யம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஏப்ரல் 18ஆம் தேதி வானிலை கணிப்பின்படி நாகையை மையமாகக் கொண்டு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஏப்ரல் 18, 23, மே 1ஆம் தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை தேதி கணிப்பின்படி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.