நாகையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் மிதனமாது முதல் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். 29, 30 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் சற்று பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் 30ஆம் தேதி வானிலை கணிப்பின்படி நாகையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 30ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் உட்பட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மழை தேதி கணிப்பின்படி 3 முதல் 5ஆம் தேதி வரை மேற்கண்ட இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 29ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல் வானாடு என்ற இடத்தில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.