தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
மார்ச் 8ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தொண்டியை மையமாகக் கொண்டு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.
இதனால் மார்ச் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமானது முதல் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதி கணிப்பின்படியும் மார்ச் 10ஆம் தேதி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.