வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
பிப்ரவரி 7ஆம் தேதி வானிலை கணிப்பின்படி நாகை மற்றும் ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.
இதனால் பிப்ரவரி 9, 10 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களிலும் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.