Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது - மழைராஜ்

Advertiesment
காற்றழுத்த தாழ்வு நிலை
, செவ்வாய், 3 மே 2011 (19:37 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் மே 4ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஏப்ரல் 27 வரையும், ஏப்ரல் 30, மே 1ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தேன். ஏப்ரல் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

தற்போது மே 4 முதல் அக்னி நட்சத்திரம் துவங்கும் நிலையில் மே 3 ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் மே 4 முதல் 7ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற்றடன் பலத்த மழையும், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படியும், தற்போதைய வானிலை கணிப்பின்படியும் மே 7 அல்லது 13ஆம் தேதியில் மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil