பருவ காலத்தில் போதுமான அளவிற்குப் பெய்த மழை, ஆதாயமான கொள்முதல் விலை ஆகியவற்றின் காரணமாக மிக அதிக நிலைத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் 2.3 முதல் 2.4 கோடி மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தியை எட்டும் என்று வணிகத் தர அமைப்பான இக்ரா தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான சக்கரை ஆண்டில் இதுவரை காணாத அளவிற்கு கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஓராண்டுத் தேவையை விட 20 இலட்சம் டன் கூடுதல் உற்பத்தி கிடைக்கும் என்றும், இதில் 15 இலட்சம் டன் ஏற்றுமதி ஆனாலும், உபரியாக 5 இலட்சம் டன் சர்க்கரை இருக்கும் என்றும் இக்ரா கூறியுள்ளது.
இதனால் இந்த ஆண்டில் சர்க்கரை விலை நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.