தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் ஏப்ரல் 13 முதல் 15ஆம் தேதி வரை தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல்பலத்த மழையும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஏப்ரல் 13, 23 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.