விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிக்கொல்லியான எண்டோசல்ஃபான் இரசாயணத்தை உற்த்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் உலகளாவிய அளவில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டில், எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டுக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்டாக்ஹோம் மாநாட்டின் முடிவை இந்தியக் குழுவும் ஏற்றுக்கொண்டது என்றாலும், அதனை இந்திய அரசு ஏற்புத் தெரிவித்து நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய பொதுவான தடை அறிவிக்கப்பட்டாலும், 22 பயிர்களைத் தாக்கும் 44 வகையான பூச்சிகளைக் கொல்ல எண்டோசல்ஃபானை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அவசியம் ஏற்பட்டால் அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.