Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ஆண்டில் 34 இலட்சம் டன் பருப்பு இறக்குமதி அவசியம்

Advertiesment
பருப்பு
, செவ்வாய், 1 மார்ச் 2011 (20:29 IST)
முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் தேவை அதிகரித்துள்ளதால் அயல் நாடுகளில் இருந்து 34 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இந்தியா பருப்பு வகைகள் இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது என்று உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் தாமஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இந்தியாவின் பருப்பு வகைகள் உற்பத்தி 165.1 இலட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டின் தேவை 191.1 இலட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்று திட்ட ஆணையம் மதிப்பிட்டுள்ளது. எனவே வரும் நிதியாண்டில் 34 இட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென அமைச்சர் தாமஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil