Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் கடன் இலக்கு நிறைவு: பிரணாப் முகர்ஜி

Advertiesment
இந்தியா
, சனி, 12 மார்ச் 2011 (19:56 IST)
2010-11ஆம் நிதியாண்டில் வேளாண் கடன்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3,75,000 கோடியில் ரூ.3 இலட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கார்ப்பரேஷன் வங்கியின் 106வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பிரணாப், “வேளாண் கடன்களில் குறிப்பாக குறைந்த கால பயிர்க் கடன் அளிப்பு மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் டிசம்பர் வரை 3 இலட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.75,000 கோடி கடனாக அளிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் கடன்களை, குறிப்பாக பயிர்க் கடன்களை மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அப்போது அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil