Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை மேலு‌ம் ‌தீ‌விரமடைய வா‌ய்‌ப்பு‌ - மழைரா‌ஜ்

Advertiesment
மழை மேலு‌ம் ‌தீ‌விரமடைய வா‌ய்‌ப்பு‌ - மழைரா‌ஜ்
, வெள்ளி, 19 அக்டோபர் 2012 (19:14 IST)
நாகையை மையமாக கொண்டு உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலு‌ம் தீவிரமடைய வாய்ப்புள்ளதா‌ல் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் பரவலாக பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் அனு‌ப்‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல்,

அக்டோபர் மாதம் 19ம்தேதி வானிலை கணிப்பின்படி தற்போது பெய்து வரும் மழை அக்டோபர் மாதம் 27 வரை நீடிக்க வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட தீவிரமாக உள்ளதால் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நாகை மற்றும் இராமநாதபுரத்தை மையமாக கொண்டதென்மேற்கு வங்க கடலபகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். மேலும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் இந்த வருடம் மிக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாலதமிழக கடற்கரை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலவரலாறு காணாத கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பருவ மழை தீவிரமாக பெய்ய வாய்ப்புள்ளதால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பும் சாத்தியகூறுகள் உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பகுதியிலும், கர்நாடகா, கேராளா மற்றும் ஆந்திராவிலும் பலத்த மழை பெய்யும் என்பதால் மேட்டூர் அணை நிரம்புவதற்கும் அதிக அளவிலவாய்ப்புள்ளது.

19ம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாகையை மையமாக கொண்டு உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை அக்டோபர் 27ம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil