Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Advertiesment
தென்மேற்கு பருவ மழை
, செவ்வாய், 26 ஜூலை 2011 (18:29 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் ஜூலை 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

ஜூலை 26ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் ஜூலை 27 முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் வட மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, புதுச்சேரி, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் ஜூலை 27 முதல் 31 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதி கணிப்பின்படி ஆகஸ்ட் 4 வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஜூலை 29 அல்லது ஆகஸ்ட் 7ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 8ஆம் தேதி அறிக்கையில் 9ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்ததுபோல், ஜூலை 10ஆம் தேதி அதிகாலை ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவில் சுனாமியும் உருவானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil