Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் - 2015: செம்மரம் கடத்தியதாக ஆந்திர வனப்பகுயில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை

Advertiesment
தமிழகம் -2015
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வனபகுதியில் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறி ஏப்ரல் 7 ஆம் தேதி 20 அப்பாவித் தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.


 

 
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப் குதியில் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறி அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
 
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் ஆந்திர காவல்துறையினரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகயில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 
20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய பழங்குடியினர் ஆணைய (என்சிஎஸ்டி) குழு பரிந்துரை செய்தது.
 
தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil