2015 செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார்.
34 வயதான ஷேக் ரஷீத் பின் குதிரையேற்றம் , கால்பந்து விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். ஷேக் ரஷீத் தீவிர விளையாட்டு வீரர். இவரது இளைய சகோதரர் ஷேக் ஹம்டான் துபாயின் இளவரசராக உள்ளார்.
அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.