Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யாக்கண்ணுவுக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது? தமிழிசை கேள்வி

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (05:17 IST)
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கி கடனை தள்ளுபடி செய்தல், விவசாயிகளுக்கு புதிய கடன் கொடுக்க வேண்டும், உள்பட பல்வெறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



 


இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல், புதுவை முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன், 'டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணுவிடம் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கின்றது என்பதை கேட்டுப்பாருங்கள். டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவது பாஜக மட்டுமே' என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments