Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவும் நானே, வில்லனும் நானே! தினகரன் சபதம்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (07:05 IST)
எடப்பாடி பழனிச்சாமி நம்முடைய பேச்சை கேட்பார் என்றுதான் அவரை முதல்வராக்கினோம், ஆனால் அவர் நம் கையை விட்டு போய்விட்டார் என்று சமீபத்தில் சசிகலாவை சந்தித்த தினகரன் புலம்பியதாகவும், இந்த ஆட்சி நடக்கவேண்டும் என்றாலும் கவிழ வேண்டும் என்றாலும் அது தன்னால் தான் நடக்க வேண்டும், அதாவது தமிழக அரசை பொறுத்த வரை ஹீரோவும் நானே வில்லனும் நானே என தினகரன் சபதம் செய்துள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.



 
 
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி தன்னுடைய கருத்து எதையும் கேட்காமல் தன்னிச்சையாக ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவு என தெரிவித்தது தினகரனை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
 
தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து முதல்வர் இனியும் மீறும் பட்சத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் 34 எம்.எல்.ஏ-க்கள் மானியக்கோரிக்கை தீர்மானம் வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தால் தீர்மானம் தோல்வி அடைவதோடு, அன்றோடு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தினகரன் தரப்பினர் எச்சரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments