Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய அமெரிக்கா: மத்திய அரசின் மெளனம் ஏன்? ப.சிதம்பர்ம்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (05:52 IST)
காஷ்மிர் குறித்து அமெரிக்கா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில் அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.



 
 
சமீபத்தில் பாரதபிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அங்கு சிகப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டதோடு, அந்நாட்டு அதிபரின் வெள்ளை மாளிகையில் விருந்தும் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இரு நாட்டு உறவு குறித்த ஆலோசனையின் போது அமெரிக்க தரப்பில், 'ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் சய்யத் சலாவுதீன், இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பல நாசவேலைகளை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். 
 
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு- காஷ்மீர்' என்று அமெரிக்கா குறிப்பிடப்பட்டதை இந்திய அரசு எப்படி ஏற்றுக்கொண்டது' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இந்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments