Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்லாமிய மக்களுக்கு அதிக இடம் கொடுப்பது திமுக மட்டும்தான்: ஸ்டாலின் பெருமிதம்

இஸ்லாமிய மக்களுக்கு அதிக இடம் கொடுப்பது திமுக மட்டும்தான்: ஸ்டாலின் பெருமிதம்
, புதன், 6 ஜூலை 2016 (14:21 IST)
தேர்தலில் இஸ்லாமிய மக்களுக்கு அதிக இடம் கொடுப்பது திமுக மட்டும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.


 

 
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை எழும்பூரில் நடைப்பெற்றது. இதில் லுங்கி, சட்டை, சேலை, அரிசி, மற்றும் மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை திமுக கட்சியின் பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 
நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:-
 
திமுக என்றும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் கட்சி. உங்களின் உரிமைகள் நிறைவேறிட குரல் கொடுத்து பாடுபடும் கட்சி திமுக.
 
காயிதே மில்லத் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழ் இன மக்களுக்காகவும் பாடுபட்டவர். அவர் மரணப்படுக்கையில் இருந்த போது, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.
 
அப்போது கருணாநிதியின் கையை பிடித்து நீ தான் இந்த சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். அதே எண்ணத்தில் தான் கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி சிறுபான்மை மக்களை காப்பாற்றி வருகிறார்.
 
அதே போன்று இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் திமுக தலைவர் கருணாநிதி, என்று கூறினார்.
 
கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் எங்கு சென்றாலும், இதனை எங்கள் கட்சி தான் செய்தது என்று பெருமிதமாக பேசுவதை இன்றும் தொடர்ச்சியாக ஒரு பழக்கமாகவே பின்பற்றி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரின் காதல் லீலைகள்: பரபரப்பு தகவல்கள்